செயற்பாட்டு அடைவுகள்

மத்தியஸ்த பயிற்றுவிப்பு உத்தியோகத்தர்களுக்கான இலங்கையில் காணப்படுகின்ற பொதுவான சட்டங்கள், சொத்து தொடர்பான சட்டகள் மற்றும் நிர்வாக அம்சங்கள் குறித்த பயிற்சிநெறி – ஒக்டோபர் 2023
  • None

மத்தியஸ்த பயிற்றுவிப்பு உத்தியோகத்தர்களுக்கான இலங்கையில் காணப்படுகின்ற பொதுவான சட்டங்கள், சொத்து தொடர்பான சட்டங்கள் மற்றும் நிர்வாக அம்சங்கள் குறித்த பயிற்சிநெறி ஒக்டோபர் மாதம் 23, 24 ஆகிய தினங்களில் சிரேஷ்ட மத்தியஸ்த ஆலோசகர் மாரிமுத்து திருநாவுக்கரசு அவர்களால் நாடத்தப்பட்டது. 19 மத்தியஸ்தர் பயிற்றுவிப்பு உத்தியோகத்தர்கள் பங்குபற்றிய இந்த 2 நாள் பயிற்சிநெறி கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த பயிற்சிநெறியில் அரசு மற்றும் தனியார் காணிகள் தொடர்பிலும் விசேட மத்தியஸ்த சபைகள் (காணி) முகாமைத்தவம் சார்ந்த சட்டங்கள் தொடர்பில் விளக்களமளிக்கப்பட்டது. அத்துடன்’ மேற்படி நடைமுறைகள் குறித்தும் மத்தியஸ்தர் பயிற்றுவிப்பு உத்தியோகத்தர்களின் பொதுவான கண்ணோட்டம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டதுடன் அவர்களது திறன்கள் மேன்படுத்தப்பட்டது.

இங்கு கலந்துரையாடப்பட்ட முக்கிய தலைப்புகள் பின்வருமாறு:

  • இலங்கையில் காணி மற்றும் சொத்துக்கள் குறித்த விளக்கமும் தனியார் காணிகளையும் சொத்துக்களையும் பதிவு செய்தல் தொடர்பான சட்டக் ஒழுங்குமுறைகள்
  • வாரிசுரிமை, மரபுரிமை, ரோமன் டச்சு சட்டம், கண்டிய சட்டம், தேசவலமை சட்டம் மற்றும் முஸ்லிம் சட்டம் ஆகிய சட்டங்கள்
  • அரச காணிகள் குறித்த விளக்கமும் காணி அமைச்சின் வகிபாகமும், காணி நிர்வாகத்திற்கான மாகாண திணைக்களங்கள் மற்றும் அரச காணிகளை கையாள்வதற்கு அதிகாரம் பெற்ற ஏனைய நிறுவனங்கள்
  • அரச காணிகள் தொடர்பான முக்கிய சட்டங்கள்: காணி அபிவிருத்தி பட்டயம், அரச காணிகள் கட்டளைச் சட்டம், காணி அன்பளிப்புச் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், நிலம் சுவீகரித்தல் சட்டம்
  • சிறப்பு மத்தியஸ்த சபைகள் நிர்வாகம் (காணி) - மூலோபாயங்களும் நிர்வாக ரீதியான சிறந்த நடைமுறைகளும்

இலங்கையில் மத்தியஸ்த திட்டத்தினை அபிவிருத்தி செய்வற்காக பயிற்சிநெறிகளை வழங்குகின்ற நடவடிக்கைகளில் ஆசிய நிலையம் ஈடுபடுவது குறித்து மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு தனது மகிழ்சியைத் தெரிவிக்கின்றது.. அத்துடன் மத்தியஸ்த ஆணைக்குழு சார்பில் ஆணைக்குழுவின் பிரதிச் செயலாளரும் மேலதிக செயலாளரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

ஆய்வு முடிவுகளை மத்தியஸ்த சபை ஆணைக்குழு மற்றும் நீதி அமைச்சு என்பவற்றிடம் முன்வைத்தலும் விளக்கமளித்தலும் - ஒக்டோபர் 2023
  • None

ஊவா மாகாணத்தின் சமூக மட்டத்தில் காணப்படுகின்ற காணித் தகராறுகள் மற்றும் கண்டி, பொலன்னறுவை, மொணராகலை, கம்பஹா, கொழும்பு மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் சமூக மட்டத்தில் நிதி தொடர்பான தகராறுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டு ஆய்வு ஒன்று நடாத்தப்டப்டிருந்த்து. இந்த ஆய்வு தொடர்பாக விளக்கமளிப்பதற்கான நிகழச்சி 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது,. . இந்நிகழ்வில் நீதி அமைச்சு, மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு, சர்வதேச மாற்றீட்டு தீர்வு கள் தொடர்பான மத்திய நிலையம் (IADRC), வறுமை பகுப்பாய்வு மையம் மற்றும் ஆசிய நிலையம் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் ஹெக்டர் யாப்பா அவர்களின் வரவேற்புரையுடன் நிகழ்வு ஆரம்பமானது. அதனை அடுத்து ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட இரண்டு வகையான மதிப்பீடு ஆய்வுகள் தொடர்பிலும் அது நடாத்தப்பட்ட சூழல் தொடர்பிலும் சுருக்கமான விளக்கம் வழங்கப்பட்டது. ஆசிய மன்றத்தின் பால்நிலை மற்றும் நீதி தொடர்பான பிரிவின் பணிப்பாளர் கலாநிதி ரமணி ஜயசுந்தர அவர்கள் இந்த விளக்கத்தினை வழங்கினார்.. நிகழ்வின் அடுத்த அம்சமாக வறுமை தொடர்பான பகுப்பாய்வுக்கான நிலையத்தின் பிரதிநிதித்துவப்படுத்தும் கலாநிதி காயத்ரி லொக்குகே, திரு மொஹமட் முனாஸ், திருமதி நதியா அஸ்மி, ஆகியோரைக் கொண்ட ஆய்வுக்குழு தமது ஆய்வுகளின் மூலம் பெற்றுக்கொண்ட முடிவுகள் தொடர்பான விளக்கதினை வழங்கினர். அந்த நிகழ்வின்போது தகராறு / பிரச்சினை மற்றும் அவற்றின் வகைகளை அடையாளம் காணலும் புரிந்துகொள்ளலும், அவ்வாறான தகராறுகள் தொடர்பில் தரப்பினர் குறித்து புரிந்துகொள்ளல், அவ்வாறான தகராறுகளைத் தீர்ப்பதற்காக தரப்பினர்கள் தற்போது பயன்படுத்துகின்ற வழிமுறைகள், தகராறுகளைத் தீர்ப்பதற்கான முறை ஒன்றினைக் கண்டுபிடித்தல் அத்துடன் காணி மற்றும் நிதி தொடர்பிலான தகராறுகளைத் தீர்க்கும் போது மாற்றிட்டு தகராறு தீர்க்கின்ற முறை ஒன்றாக மத்தியஸ்த செயற்பாட்டினை அறிமுகம் செய்வதை பரிந்துரைத்தல் போன்ற விடயங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது., கண்டி, பொலன்னறுவை, மொணராகலை, கம்பஹா, கொழும்பு மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் நிதி சம்பந்தமான விசேட மத்தியஸ்த சபைகளும் அத்துடன் பதுளை மற்றும் மொணராகலை மாவட்டங்களில் காணி சம்பந்தமான விசேட மத்தியஸ்த சபைகளும் நிறுவுவது தொடர்பில் நேரடியாக பங்களிப்பு வழங்குகின்ற இந்த மதிப்பீட்டு ஆய்வுகளின் முடிவுகள் தொடர்பில் நீதி அமைச்சும் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவும் தங்களது பாரட்டுக்களைத் தெரிவித்தனர்.

மத்தியஸ்த்தத்தின் உலகலாவிய போக்குகள் என்ற தலைப்பிலான செயலமர்வு - மே 2023
  • None

2023 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி மத்தியஸ்தத்தின் உலகலாவிய போக்குகள் என்ற தலைப்பில் செயலமர்வு ஒன்று Jonathan Bartsch என்பவரால் நடத்தப்பட்டது. BMICH அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நீதி அமைச்சின் உத்தியோகத்தர்கள் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள், நிதியுதவி வழங்குவோர்., சர்வதேச மற்றும் உள்நாட்டு அரச சாராத சமூக சேவை நிறுவனங்கள், சட்டக் கல்வி வழங்குகின்ற நிறுவனங்கள், தகராறுகள் தீர்ப்பதற்கான மாற்றீடு தொடர்பில் செயற்படுகினற தரப்பினர்கள், தனிநபர்கள் என பலரும் கலந்து கொண்டனர். தகாராறுகள் தீர்த்தல் தொடர்பிலான மத்தியஸ்த செயற்பாடுகளின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்ற அடிப்படையில் இந்த செயலர்வு வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும் மத்தியஸ்தம் குறித்து புரிந்துணர்வு உள்ள சமூகம் ஒன்றினை உருவாக்குதல், மத்தியஸ்த செயற்பாட்டிளை இன்றும் மேம்படுத்துவதற்காக ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலமாக அடைந்துகொள்ள முடியுமான சமூக ரீதியான பயன்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

மத்தியஸ்தர் பயிற்சி உத்தியோகத்தர்ளுக்கான (MTOs) மத்தியஸ்த திறன்கள் மற்றும் நுட்பங்கள் தொடர்பான உயர் பயிற்சி - மே 2023
  • None

மத்தியஸ்தர் பயிற்சி உத்தியோகத்தர்ளுக்கான (MTOs) மத்தியஸ்த திறன்கள் மற்றும் நுட்பங்கள் தொடர்பான உயர் பயிற்சிச் செயலமர்வு 2023 மே 15 முதல் 19 வரை மூவன்பிக் ஹோட்டலில் USA, Collaborative Decision Resources Associates எனும் நிறுவனத்தின் இன் அதிபர் ஜொனாதன் பார்ட்ச் என்பவரால் நடத்தப்பட்டது. 20 மத்தியஸ்தர் பயிற்சி உத்தியோகத்தர்கள் இந்தச்செயலமர்வில் பங்கேற்றனர், இந்த நிகழ்வின் போது பயிற்றுவிப்பாளர்களிடம் காணப்பட்ட அறிவு மறுபரிசீலனை செய்யப்பட்டது, அத்துடன் சட்ட மறுசீரமைப்பு மற்றும் பலவகையான தரப்பினர்களை மத்தியஸ்தம் செய்தல் போன்ற புதிய கோட்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன, மேலும் மத்தியஸ்தர் பயிற்சி உத்தியோகத்தர்களின் திறன்களை விருத்தி செய்யும் நோக்கில் உருவகப்படுத்துதல்கள், செயற்பாடுகள் என்பன ஊடாக பயிற்றுவிக்கப்பட்டனர். 5 நாட்கள் தொடராக நடைபெற்ற இந்த செயலமர்வில் மத்தியஸ்த செயல்முறையின்: கோட்பாடுகளும் நடைமுறைகளும், மத்தியஸ்த செயல்முறையும் நிதி சார்ந்த தகராறுகளும், வீடு காணி சொத்து தகராறுகள், நீதி மறுசீரமைப்பு, பல சாரார்களை மத்தியஸ்தம் செய்தல் சமூக ஈடுபாடுகளும் மத்தியஸ்த பயிற்றுவிப்பு உத்தியோகத்தர்களுக்கான வேலைத் திட்டங்கள்’ என பல்வேறு தலைப்புகளில் விரிவுரைகள் நடாத்தப்பட்டன. ஏற்கனவே மத்தியஸ்த பயிற்றுவிப்பு உத்தியோகத்தர்களிடம் காணப்பட்ட விடய அறிவு மறுபரிசீலனை செய்யப்பட்டதுடன் மேடைப்பேச்சுத் திறன்களை விருத்தி தொடர்பான பயற்சிகளும் வழங்கப்பட்டது. அத்துடன் நவீன முறைகளை எதிர்கால நடவடிக்கைகளில் உட்டுபத்தல் தொடர்பாகவும் கலந்துரையடப்பட்டது. மத்தியஸ்த செயற்பாடுகளின் உலகலாவிய போக்கு தொடர்பில் எதிர்காலத்தில் மாற்றியமைக்கவேண்டி விடயங்கள் தொடர்பிலும் இந்தச் செயலமர்விக் கவனம்செலுத்ப்பட்டது.

இலங்கையில் மத்தியஸ்தத்தில் பால்நிலையினை மையநீரோட்டப்படுத்தல் தொடர்பான உயர் செயலமர்வு - நவம்பர் 2022
  • None

மத்தியஸ்தத்தில் பால்நிலையினை மையநீரோட்டப்படுத்தல் தொடர்பான செயலமர்வு 2022 நவம்பர் 18, 19 ஆகிய திகதிகளில் கொழும்பில் அமைந்துள்ள சினமன் லேக்சைட் ஹோட்டலில் ஆசியா நிலையத்தின் மூலமாக நடாத்தப்பட்டது. இந்தச் செயலமர்வானது பால்நிலை மற்றும் பெண்கள் தொடர்பிலான சமத்துவம் என்ற கருப்பொருளின் கீழ் 9 தலைப்புக்களில் விரிவுரைகளை உள்ளடக்கியிருந்த்த்து. ஆசிய நிலையத்தின், நீதி மற்றும் பால்நிலை செயற்திட்டப் பணிப்பாளர் டாக்டர் ரமணி ஜெயசுந்தர, மத்தியஸ்தம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சட்டத்தரணி திரு. எம். திருநாவுக்கரசு, ஆசியா நிலையத்தின் பெண்களின் குரல் மற்றும் தலைமைத்துவ செயற்திட்டம் /ஆசியா நிலையத்தின் முகாமையாளர் திருமதி உதேனி தேவருப்பெரும, ஆகியோர் இந்த நிகழ்வில் விரிவுரை வழங்கினர். இந்த நிகழ்வில் பால்நிலையினை மையநீரோட்டப்படுத்தல்; தொடர்பான என்னக்கருவும் விளைவுகளை இனங்காணலும், முரண்பாடுகளின்போதான பால்நிலை சார் பிரச்சினைகளை இனங்காணல், பெண்களின் உரிமைகள் தொடர்பில் இலங்கை நீதித் துறையின் எதிர்வினையாற்றல், மத்தியஸ்த செயற்பாட்டில் பெண்களுக்கான குரலும் அவர்களுக்கான இடத்தினை உருவாக்குதலும், முரண்பாடொன்றில் பங்காளர்களான பெண்கள் தொடர்பில் மத்தியஸ்த செயற்பாட்டு இடம்பெறவேண்டிய முறைகள். மற்றும் பாதுகாத்தல், வலுவூட்டல், பல்வகைமையும் உட்சேர்க்கையும், இலங்கையில் பெண்களின் உரிமைகளுக்கான நீதித்துறையின் ஏற்பாடுகள் என்ற அடிப்படையிலான தலைப்புக்களில் நடாத்தப்பட்ட இந்தச்செயலமர்வில் 25 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அடிப்படையில் 20 மத்தியஸ்தர் பயிற்றுவிப்பு உத்தியோகத்தர்கள் (13 ஆண்கள் மற்றும் 7 பெண்கள்) கலந்து கொண்டிருந்தனர்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான முன்னோடிப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் – 2022 ஜனவரி முதல் நவம்பர் வரை
  • None

மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவுக்கு இணைப்புச் செய்யப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான முன்னோடிப் பயிற்சித் நிகழ்ச்சித் திட்டமானது பிரிட்டிஷ் கவுன்சில் (British Council) மற்றும் ஆசியா நிலையம் என்பவற்றின் பங்களிப்புடன் நடைபெற்றது. 2022 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப் பகுதியில் மூன்று நாட்கள் வதிவிட அடிப்டையில் 09 நிகழ்ச்சிகளாக இது நடாத்தப்பட்டது. இந்தப் பயிற்சித்தொடரில் 360 அபிவிருத்தி உத்தயோகத்தர்கள் பங்குகொண்டு பயன்பெற்றனர். புதிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் (மத்தியஸ்தம் தொடர்பான) திறன்களை விருத்தி செய்து தேசிய ரீதியிலான மத்தியஸ்த செயற்பாடுகளுக்கு ஒத்தாசை வழங்குகின்ற அடிப்படையில் அவர்களை தயார் படுத்துவது இந்த செயலமர்வின்நோக்கமாக இருந்த்து. அத்துடன் அவர்களது கடமைகளை திறம்படவும் வினைத்திறனாகவும் மேற்கொள்வதற்காக அவர்களது திறன்ளை விருத்தி செய்வதும் நோக்கங்களில் உள்ளடங்கியிருந்த்து.. நீதிக்கான பிரவேசம் தொடர்பிலான தேசிய மற்றும் சர்வதேச கண்ணோட்டம்,. ஜனநாயகம், சட்டத்தின் ஆழுகையும் பொதுமக்களின் ஈடுபாடும், சமத்துவம், பல்வகைமையும் உட்சேர்க்கையும் (EDI), மாற்றுத் தகராறு தீர்வு (ADR), மத்தியஸ்தம் தொடர்பான கோட்பாடுகளும் நடைமுறைகளும், இலங்கையில் உள்ள மத்தியஸ்த செயல்முறை - சட்ட மற்றும் நிர்வாக கட்டமைப்பு, அரச நிர்வாக கட்டமைப்பு, அரச நிர்வாக சூழல், அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கடமைப் பட்டியல், பொதுவாக ஒழுங்குவிதிதகள், தொழில் சார் நிபுணத்துவம், தலைமைத்துவ திறன்கள்,தொடர’பாடல், குழுப்பணி, நிர்வாக திறன்கள். என பல்வேறு தலைப்புகளில் இந்தப் பயிற்சித் திட்டம் மூலமாக கவனம் செலுத்தப்பட்டது’.