0112 334 323
|
mbc2016.gov@gmail.com
|
4th Floor, Ministry of Justice Building, No. 19, Sri Sangaraja Mawatha, Colombo 12

பிணக்குகளின் விசேட வகைகள்

பிணக்குகளின் விசேட வகைகள்

The Minister of Justice is mandated by the law to determine special categories of disputes which are eligible to be brought under the purview of mediation. The following categories have been determined:-

காணி தொடர்பான தகராறுகள் என்பது பொதுவான நிகழ்வுகளாகக் கருதப்படுவதுடன் இவைகள் சமூக மத்தியஸ்த சபையிடமே ஒப்படைக்கப்பட்டு மத்தியஸ்தம் செய்யப்பட்டு வந்தது. எனினும் சாதாரண பிரஜைகளுக்கும் அரசாங்கத்தும் இடையில் காணப்படுகின்ற காணித் தகராறுகள் தீர்க்னப்படாமல் அவற்றின் எண்ணிக்கையில் அதிகரப்பு ஏற்பட்டது. இவற்றுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறையாக வடக்கு மற்றும் கிழக்கில் காணி உரிமை தொடர்பான பிணக்குகளைத் தீர்ப்பதற்கு விசேட காணி மத்தியஸ்த சபைகளை ஸ்தாபிக்கவேண்டிய தேவை ஏற்பட்டது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, அனுராதபுரம், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு, குருணாகல், கண்டி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தற்போது பதினாறு (16) காணி விசேட மத்தியஸ்த சபைகள் (Land SMBs) செயற்பட்டுவருகின்றன.. காணி தகராறுகள் தொடர்பான நிதி எல்லைகள் 2021 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டமூலத்தில் ஒரு மில்லியன் ரூபாய்க்கு (ரூ. 1,000,000) குறைவாக இருக்கின்ற தகராறுகள் மத்தியஸ்தத்திற்கு எடுக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விசேட மத்தியஸ்த சபைகள் காணிப் பிணக்குகளுக்குளைத் தீர்ப்தற்காக சட்ட ரீதியானதும் நிர்வாக ரீதியானதுமான வழிமுறைகள் மூலமாக முடிந்த அளவில் முயற்சிகளைமேற்கொள்கின்றது. காணி தொடர்பான பிணக்குகள். தீர்க்கப்பட முடியாததாக அமையும் போது குறித்த மத்திய சபைகள் இது தொடர்பில் உரிய தீர்வை வழங்க முடியுமான இடங்களுக்கு பிரச்சினையை அல்லது சம்பந்தப்பட்டவர்களை அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொகின்றது.

நிதி சம்பந்தப்பட்ட தகராறுகளும் காணித் தகராறுகளைப் போலவே சாதாரண பிரச்சினைகளாக சமூக மத்தியஸ்தத சபைகளின் ஊடாக விசாரிக்கப்பட்டு வந்தது.. இவ்வாறு விசாரிக்கப்பட்டாலும் கூட நிதித் தகராறுகள் அவற்றின் எண்ணிக்கையிலும் வகைகளிலும் குறிப்பிடத்தக்க அதிகரித்துச் செல்ல்லானது. (பொது மக்களுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் இடையே காணப்பட்ட தகராறுகளை உதாரணமாக் குறிப்பிடலாம்) இவ்வாறான தகராறுகளை மத்தியஸ்தம் செய்யும் போது சமூக மத்தியஸ்த சபைகள் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகார வரம்புகளை மீறியதாக செயற்படுகின்றதா என்ற கேள்விகள் தோன்ற ஆரம்பித்த்ன.  

இதன் விளைவாக நிதி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக விசேட மத்தியஸ்த குழு அமைப்பது தொடர்பில் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு நீதி அமைச்சிடம் வேண்டுகோள் முன்வைத்த்து. இந்த வேண்டுகோளுக்கு இணங்க நீதி அமைச்சு இலங்கையில் நிதிப் பிரச்சினைகளுக்காக விசேட மத்தியஸ்த சபைகளை அமைப்பதற்கு நடவடிக்கையினை மேற்கொண்டது.. கொழும்பு, கம்பஹா, கண்டி, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் மொணராகலை ஆகிய ஆறு மாவட்டங்களில் விசேட மத்தியஸ்த சபைகள் (நிதி) அமைக்கப்பட்டன. இந்த மத்தியஸ்த சபைகளுக்கு ஒரு மில்லியன் ரூபாய்க்குக் குறைவான (ரூ. 1,000,000.00) மதிப்புள்ள நிதிப் பிணக்குகளை விசாரிக்கவும் மத்தியஸ்தம் செய்யவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்த மதிப்பினை விடவும் கூடய அளவிலான நிதி தொடர்பான சர்ச்சைகளைக் குறிப்பிட்ட தகறாருக்கு உட்பட்டவர்கள் சுய விருப்பத்துடன் தன்னார்வமாக மத்தியஸ்த சபையிடம் ஒப்படைக்கும் போது, அவைகளை விலக்காது ஏற்றுக்கொள்வதற்கு மத்தியஸ்த சபைகள் நடவடிக்கை எடுக்கின்றன.

2004 ஆம் ஆண்டு இலங்கையில் சனாமி அணர்தம் ஏற்பட்டதன் காரணமாக மதிப்பிட முடியாத அளவு சேதங்கள் ஏற்பட்டன. (உயிரிழப்புக்கள், உடமைகள் சேதமடைதல் என்பன போன்ற) அப்போது ஏற்பட்ட இழப்புக்களுக்கு மேலதிகமாக நீண்ட கால அடிப்படையிலும் சிலவகையான தீங்குகளும் சுனாமியின் விளைவாக ஏற்பட்டது. செத்துக்கள் இழத்தல், சேதமால் கடன்படுதல் என இந்த சுனாமி பேரழிவால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டவர்கள் பல பிரச்சினைளை எதிர் கொண்டிருக்கின்றனர். இந்தப் பிரச்சினைக்கு உட்பட்டவர்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளில் பொரும்பாலானவை அரச நிறுவனங்களுக்கு எதிராகவும் அரச உத்தியோகத்தர்களின் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பாகவும் கிடைக்கப் பெற்றன. இந்தப் பிணக்குகளைத் தீர்ப்பது மத்தயஸ்த சபைகளால் முடியாத காரியமாக அமைந்தது.

ஆகவே, சுனாமி மூலம் ஏற்பட்ட, கடன்கள், சேதங்கள் அல்லது கோரிக்கைகளின் விளைவாக ஏற்படுகின்ற பிணக்குகள் தொடர்பான சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கு வசதி வாய்ப்புக்களை வழங்குமுகமாக விசேட மத்தியஸ்த சபைகள் அமைக்க வேண்டி ஏற்பட்டது. அதன் படி 2003 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க மத்தியஸ்த (விசேட வகைகளைச் சார்ந்த பிணக்குகள்) சட்டத்தின் பிரகாரம் சுனாமி விசேட மத்தியஸ்த சபைகள் 2005 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டன.

அதன்படி இந்த விசேட மத்தியஸ்த சபைகளை அமைப்பதற்காக பதின்மூன்று (13) நிர்வாக மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டன. தன்னிடம் வருகின்ற பிணக்குகளில் ஐநூறு ஆயிரம் ரூபா (ரூ. 500,000.00) அளவு வரையான தகராறுகளை மத்தியஸ்தம் செய்வதற்கும் அவைகளைத் தீர்ப்பதற்குமான அதிகாரம் இந்த வகையா மத்தியஸ்த சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி அளவின் உச்சவரம்புக்குக் உட்பட்டதாக வருகின்ற தகராறுகள் தொடர்பில் நீதிமன்ற சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் கட்டாயமாக மத்தியஸ்த சபைகளில் சமர்ப்பிக்கப் படவேண்டும் என்பதாக சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்புகளுக்காக வெளிநாடு செல்கின்றவர்களின் தொழில் நடைமுறைகள் சார்ந்த பிணக்குகளைத் தீர்க்கின்ற பணிகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேற்கொண்டது. சில போது அவை சமூக மத்தியஸ்த சபைகளிடம் ஒப்படைக்கப்பட்டு தீர்க்கப்பட்டன.. இலங்கைக்கான தேசிய தொழிலாளர் புலம்பெயர்வுக் கொள்கையின் ஊடாக இது தொடர்பில் விசேட மத்தியஸ்த சபைகள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியப்பாடு குறித்து வலியுறுத்தியது. 

அதன் பிரகாரம், இலங்கையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான முதலாவது சிறப்பு மத்தியஸ்த சபை குருணாகலயில் 2018 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களால்), புலம்பெயர்கின்றவர்களின் பிள்ளைகளின் கல்வி மற்றும் நலன் பேணுதல், வெளிநாட்டு வேலைக்கு புறப்படுவதற்கு முந்தைய செயல்பாட்டின் போது நடைபெறுகின்ற குற்றச் செயல்கள் மற்றும் சொந்த நாட்டுக்குத் திரும்பும்போது எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சனைகள் என இவர்களிடம் பலவிதமான பிணக்குகள் காணப்படுகின்றன. இந்தப் பிரச்சிகைகள் தொடர்பில் செவிசாய்க்கவும் மத்தியஸ்தம் செய்யவும் அவற்றுக்கான தீர்க்கவுகளை வழங்கவும் மத்தியஸ்த சபைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு மில்லியன் ரூபாய் (ரூ. 1,000,000.00) நிதி வரம்புக்குட்பட்டதாக்க் காணப்படுகின்றதும் மேற்படி வகைகளில் உள்ளடங்குகிள்றதுமான பிணக்குகள் விசேட மத்தியஸ்த சபைக்கு கட்டாயமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதாக சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.