0112 334 323
|
mbc2016.gov@gmail.com
|
4th Floor, Ministry of Justice Building, No. 19, Sri Sangaraja Mawatha, Colombo 12

பாடசாலை மத்தியஸ்தம்

பாடசாலை மத்தியஸ்தம் என்றால் என்ன?

பாடசாலைகளில் ஏற்படுகின்ற பிணக்குகளை சமாதானமாகவும் செயல்திறன் மிக்கதாகவும் தீர்ப்பதற்குத் தேவையான திறன்களை மாணவர்கள் மத்தியில் உருவாக்கும் நோக்கில் பாடசாலை மத்தியஸ்த சபைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தகராறுகளைத் தீர்க்கின்ற செயற்பாடுகளில் முறையான தொடர்பாடல், சுமூகமான பேச்சுவார்த்தை நடாத்தல், சமரசம் செய்துவைத்தல், போன்ற செயற்பாடுகளின் முக்கியத்துவத்தை பாடசாலை மாணவர்கள் புரிந்துகொள்ள இது அவர்களுக்கு உதவுகிறது. பாடசாவை மத்தியஸ்த திட்டம் நாடு முழுவதும் உள்ள மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் மத்தியஸ்த செயற்திட்ட அதிகாரிகளின் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. நாளைய சமூகத் தலைவர்கள் என்ற வகையில் தகராறுகளைத் தீர்க்கும் செயற்பாடுகளில் பங்களிப்புச் செய்வதற்கு இந்தத் திட்டம் மாணவர்களுக்கு உதவியாக அமைகின்றது.

பின்னணி

மத்தியஸ்தம் என்பதானது தொடர்பாடல் ஊடகத்தினைக் கருவியாகப் பயன்படுத்தி வெற்றிகரமான முறையில் பிணக்குகளைத் தீர்க்கின்ற பொறிமுறையாகும்,. பாடசாலை மாணவர்களின் சமூகம் சார்ந்ததும் தனிப்பட்ட அடிப்படையிலானதுமான திறன்களை மேம்படுத்துகின்ற நோக்குடன் பிணக்குகளைத் தீர்க்கின்ற மாற்றீட்டுத் தீர்வு முறைகள் குறித்து மாணவர்களுக்கு அறியப்படுத்துவதற்காக இத்திட்டம் அமைக்கப்ட்டது. கல்வி அமைச்சு நீதி அமைச்சகத்துடன் இணைந்து இந்த திட்டத்தினை செயற்படுத்துகின்றது. இந்த செயற்திட்டானது தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பாடசாலைகளை மையமாக்க் கொண்டு முன்னோடி திட்டதமாக 2004 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்தியஸ்த செயற்திட்டங்களின் நோக்கங்களுக்கு இணங்க, மேற்படி பாடசாலைகளில் “பாடசலை மத்தியஸ்த அலகுகள்" அமைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அவைகள் வெற்றிகரமாக இயங்கியதன் விளைவாக இந்த செயற்திட்டத்தினை நாடு முழுவதும் செயல்படுத்துவமற்கான நடவடிக்கைகள் ஜனாதிபதி செயலகத்தினால் ஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டது..

பாடசாலைகளில் மத்தியஸ்த அலகுகள் நிறுவுகின்ற பணி 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன் சுமார் 350 பாடசலைகளில் மத்தியஸ்த பிரிவுகள் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளன. 2018 ஆம் ஆண்டு 86 பாடசலைகளிலும் 2019 ஆம் ஆண்டு 96 பாடசலைகளிலும் மத்தியஸ்த அலகுகள் நிறுவப்பட்டதாக புள்ளி விபரங்கள் ஊடாக அறிய முடிகின்றது.

நோக்கம்

முதன்மை நோக்கம்

தகராறுகள் குறைந்ததும் அமைதியாக கற்கின்ற சூழலும் கொண்ட பாடசாலைக் கட்மைப்புகள் ஊடாக சகவாழ்வு கொண்ட சமூகத்தை உறுதி செய்தல்

இரண்டாம் நிலை நோக்கம்

  • சிறிய தகராறுகளை மாணவர்களாகவே தீர்த்துக்கொள்கின்ற அடிப்படையில் தகராறுகள் குறைந்ததும் பாதுகாப்பான சூழலையும் பாடசலைகளை உருவாக்குதல்
  • பகிரத்தக்க விழுமயங்கள் ஊடாக மாணவர்களுக்கு மத்தியஸ்தம் குறித்த எண்ணக்கருக்களை அறிமுகப்படுத்தலும் மத்தியஸ்த்த்த்ன் நடைமுறைகளையும் விடய அறிவையும் வழங்குதல்
  • உள்ளூர் மத்தியஸ்த சபைகளில் மத்தியஸ்தர்களாக பிரதிநிதித்துவப்படுத்த மாணவர்களை ஊக்குவித்தல்.