சமூக மத்தியஸ்தம் என்றால் என்ன?
தகராறுகளைத் தீர்ப்பதற்கான பிரபல்யமானதொரு மாற்றீட்டுப் பொறிமுறையாக சமூக மத்தியஸ்த செயன்முறை காணப்படுகின்றது.. ஒரு சமூகத்திற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் குழுவிற்கோ இந்த வகையிலான மத்தியஸ்த செயற்பாடுகளின் ஊடாக அவர்களது பிரச்சினைகளைத் சுமூகமாகத் தீர்ப்பதற்கு ஒத்தாசை வழங்கப்படுவதனால் இந்தப் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது.
சமூகம் தொடர்பான தகராறுகளைத் தீர்பது என்பது சமூ மத்தியஸ்தத்தின் பிரதான பணியாகும். இங்கு முக்கியமாக அண்டை வீட்டார்களுக்கு இடயே இடம்பெறுகின்ற தகராறுகள், காணி உரிமையாளர்களுக்கும் அந்தக் காணிகளைக் குத்தகைக்கு பெற்றவர்களுக்கும் இடையே ஏற்படுகின்ற தகராறுகள், தனிநபர்களுக்கு இடையே ஏற்படுகின்ற தகராறுகள், பொதுவாக ஏற்படுகின்ற சிவில் சார்ந்த பிரச்சனைகள், குடும்ப பிணக்குகள், காணி மற்றும் சொத்து தொடர்பான தகராறுகள், காணிகளின் எல்லைகள், பாதைகள், காணிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தல், போன்ற தகராறுகள் , உரிமை மற்றும் உடமை தொடர்பான சர்ச்சைகள் இங்கு முக்கியத்துவம் பெறுபவையாகக் காணப்படுகின்றன.
சமூக மத்தியஸ்த சபைகளை நிறுவுவதன் ஊடாக சமூகத்தில் காணப்படுகின்ற தகராறுகள் மத்தியஸ்தம் செய்கின்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட மத்தியஸ்த சபையானது அதற்காக வரையறுக்கப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்டபட்ட பிரதேசத்தில் வசிக்கின்றவர்களுக்காக மாத்திரமே சேவையாற்றுவதாகின்றனர். இதன் காரணமாக இந்த மத்தியஸ்த செயல்முறையானது சமூகத்தின் கட்டமைப்பிலும் சமூக நடைமுறையிலும் வேரூன்றியதாகக் காணப்படுகின்றது. அத்துடன் மேற்படி நடைமுறை பின்பற்றப்படுவதானது சமூக மத்தியஸ்த செயன்முறை ஒர் இடத்திற்கு மட்டுப்படுத்தப்படானது இலங்கை முழுவதும் பரந்து விரிவதற்கு காரணமாக அமைந்துள்ளது. மத்தியஸ்த சபைகளின் அங்கத்வர்கள் தன்னார்வ அடிப்படையில் இணைவதாலும் அவர்கள் அந்தப் பிரதேசங்களில் வசிப்பவர்களிலிருந்து தெரிவு செய்யப்படுவதானாலும் இந்தக் கட்டமைப்பானது இன்னும் பலம்பெற்றதாக அமைகின்றது. தற்போதளவில், இலங்கையில் பல்வேறுபட்ட மக்கள் தொகைகளுடன் 330 பிரதேச செயலகப் பிரிவுகளில் இயங்கி வருகின்றன.
தனிப்பட்ட ரீதியிலும் சமூக ரீதியிலும் ஏற்படுகின்ற தகராறுகள் மற்றும் சிறிய குற்றங்களுக்காக அவற்றுடன் சம்பந்தப்பட்ட தரப்பினர்களை இணங்க வைக்கின்ற அடிப்படையில் தீர்வுகளைப் பெறுவதற்கான பங்களிப்பினை சமூக மத்தியஸ்தம் தொடராக வழங்கி வருகின்றது... இவ்வாறு பரந்த வலையமைப்பொன்றாகச் செயற்படுகின்ற மத்தியஸ்த சபைகள், நீதிமன்றத்தின் செயற்பாடுகளுடன் ஒப்பிடும்போது மிக விரைவானதும் செலவு குறைந்ததுமான மாற்றீட்டு செயற்பாட்டுத் திட்டமாக செயல்படுகின்றது. மேலும் அந்த நடவடிக்கைகளில் வெற்றியும் கண்டுள்ளதுடன் ஒருங்கிணைந்த சமூக்கக் கட்டமைப்பு ஒன்றினை கட்டிய்யெழுப்புவதிலும் தமது பங்களிப்பினை வழங்கி வெற்றிகண்டுள்ளது

