மத்தியஸ்த சபைகள் சட்டத்தின் பிரகாரம் (இல 72/1988) இலங்கையில் முதலாவது சமூக மத்தியஸ்த சபையானது (CMBs) 1990 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மத்தியஸ்த சபைகள் என்பது, மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு எனும் சுயாதீனமாக இயங்குகின்ற நிறுவனத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் உள்ளடங்குகின்றது. அத்துடன் ,நீதி அமைச்சின் கொள்கை ரீதியிலானதும் நிர்வாக ரீதியானதுமான ஒதுழைப்பினையும் கொண்டுள்ளது. இன்றளவில் இந்த கட்டமைப்பானது நாடு முழுவதும் பரந்து விரிந்து, 329 சமூக மத்தியஸ்த சபைகளில் (CMBs) 8,600 க்கும் அதிகமான பயிற்சி பெற்ற மத்தியஸ்தர்கள் இணைந்து செயற்படுகின்ற அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. இந்த மத்தியஸ்தர்களில் 27% ஆனவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்., இந்த மத்தியஸ்தர்களின் மூலமாக வருடத்தில் சுமார் 250,000 ற்கும் அதிகமான பிணக்குகள் மத்தியஸ்தத்திற்காக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு மத்தியஸ்தத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்ற தகராறுகளில் 65% ஆனவைகள் தீர்த்து வைக்கப்படுகின்றன. இவை தவிர சில விசேட பிரதேசங்களில் ஏற்படுகின்ற சமூக பொருளதார பிணக்குகளை (உ+ம் காணி மற்றும் நிதி சார்ந்த தகராறுகள்) தீர்ப்பதற்காக விசேட மத்தியஸ்த சபைகளும் (SMBs) காணப்படுகின்றன.

மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவனது பிணக்குகளைத் தீர்பதற்காக விருப்பத்தினை அடிப்படையாகக் கொண்ட மத்தியஸ்த செயற்பாட்டு முறை ஒன்றினையே பயன்படுத்துகின்றது. தகராறுக்கு காரணமாக அமைந்த விடயம் என்ன என்பதனைப் புரிந்துகொள்வதற்கும், குறித்த தரப்பினர்களிடையே காணப்படுகின்ற பிணக்கினைத் தீர்க்கின்ற செயற்பாடுகளுக்கும் மத்தியஸ்தர்கள் தமது ஒத்துழைப்பினை வழங்க வேண்டியுள்ளது. அவ்வாறு செயற்படுவதன் மூலமாக தகராறுகளுக்கு உட்பட்டவர்களின் தேவைப்பாடுகள் குறித்து மிகவும் சிறந்த மதிப்பீடு ஒன்றினை மேற்கொள்ள முடிகின்றது.. மத்தியஸ்த செயற்பாட்டின் போது குறித்த தரப்பினர்களிடம் காணப்படுகின்ற இயலுமையின் அளவுகள் சமமாக அமைவதில்லை என்பதனை புரிந்து கொண்ட நிலையிலேயே மத்தியஸ்தர்கள் செயற்படுகின்றனர். அத்துடன் குறித்த தகராற்றினை முறையாக தீர்த்து வைப்பதற்கான அடித்தளம் ஒன்றாக தகராற்றுக்கு உட்பட்டுள்ள இரண்டு தரப்பினர்களினதும் இயலுமையினை சமப்படுத்துவதற்கான செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்துவர். இந்த செயற்பாட்டின் மூலமாக நீதி மன்றத்தில் வழக்கு விசாரிக்கின்ற செயற்பாட்டில் போன்று தகராற்றினை விசாரித்து குற்றவாளி என்றோ குற்றமற்றவர் என்றோ தீர்ப்பு வழங்கப்படுவதில்லை மாறாக. இரண்டு தரப்பினர்களும் ஏற்றுக்கொள்கின்ற அடிப்படையிலான தீர்வு ஒன்றை அவர்களாகவே அடைந்துகொள்வதற்காக அவர்கள் விவாதித்துக் கொள்வதற்காக ஒத்தாசை புரிதலே மத்தியஸ்த செயற்பாட்டில் மத்தியஸ்தர்களால் மேற்கொள்ளப்படுகின்ற பணியாகும்.

சிறிய குற்றங்கள், தவறுகள், அசைகின்ற அசையாத சொத்துக்கள் தொடர்பாக ஏற்படுகின்ற சிவில் தகராறுகள், காணிப், பிரச்சினைகள் வீட்டு வன்முறைகள், கடன்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் சார்ந்த பிரச்சினைகள் என பொதுவாக மனிதர்களிடையே ஏற்படுகின்ற தகராறுகள் பலவற்றையும் தீர்ப்பதற்கான நோக்கில் சமூக மத்தியஸ்த சபைகள் நிறுவப்பட்டுள்ளது.. இது தொடர்பான (72/1988) சட்ட மூலத்தின் 2016 ஆம் ஆண்டு திருத்ததிற்கு அமைவாக சில தகராறுகளை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு முன்னதாக அவைகள் மத்தியஸ்த சபையில் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. (ரூபா 1,000,000 இற்கு குறைந்த கடன்கள், சேதமேற்படுத்தல், நோகடித்தல், அத்துமீறல்கள், பயமுறுத்தல்கள், முறைகேடுகள் போன்ற சிறிய குற்றங்கள் இதற்கு உதாரணமாகும்.

தகராறுகளுக்கு உட்பட்டவர்கள் தமது பிணக்குகளை தாமாகவே மத்தியஸ்த சபைக்கு எடுத்துச்செல்லலாம். அல்லது பொலிஸ் நிலையத்தின் ஊடாக அல்லது நீதி மன்றத்தின் ஊடாக தகராறினை மத்தியஸ்த சபைக்கு முன்வைக்கலாம்.

தகராறுகளுக்கு உட்பட்டவர்களின் விருப்பத்தின் பேரில் மத்தியஸ்தர்கள் மூன்று பேர்களைக் கொண்டதாக மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டு அதன் மூலமாக குறித்த தகராறு தொடர்பில் மத்தியஸ்த செயற்பாடுகள் மேறகொள்ளப்படும். தகராறு எற்படுத்திக் கொண்டவர்கள் அவர்களது சுய விருப்பத்தின் பேரிலேயே மத்தியஸ்த செயற்பாட்டில் பங்குகொள்வதுடன் அவர்கள் எந்த நேரத்திலும் நிர்பந்திக்கப்பட முடியாது. மத்தியஸ்த கூட்டங்கள் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை (பொதுவாக வார இறுதி நாட்களில்) கடுமையாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் எதுவும் இன்றி சாதரணமாக நடைபெறும். பொதுவாக இந்த செயற்பாட்டிற்காக பாடசாலை மண்டபம் அல்லது ஊரில் காணப்படுகின்ற விகாரை போன்ற ஒரு இடம் தெரிவு செய்யப்படும். இந்த மத்தியஸ்த செயற்பாட்டு நடவடிக்கைக்காக அரசு அல்லது அரசாங்கத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக எந்த ஒருவரும் பங்குகொள்வதில்லை. அத்துடன் வழக்கறிஞர் போன்ற இடைத் தரகர்களும் இந்த செயன்முறையில் பங்குகொள்வதற்கு இடமளிக்கப்டுவதில்லை. மத்தியஸ்த நடவடிக்கைகள் முறையான சட்டசெயற்பாடு ஒன்றாக அமைவதில்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும். மத்தியஸ்த செயற்பாட்டின் மூலமாக மேற்கொள்ளப்படுகின்ற சமரசப்படுத்தல்கள் தொடர்பான முடிவுகள் தீர்மானங்கள் என்றபன முறையான நீதிமன்றங்களால் ஏற்றுக்கொளப்படுவதில்லை (தகாரறுகள் நீதிமன்றத்தினால் மத்தியஸ்த சபைக்கு முன்வைக்கபடும் போது ஏற்றுக்கொள்ளப்படும்) எனினும் மத்தியஸ்த சபையினால் குறித்த தகராற்றினை மத்தியஸ்தம் செய்ய முடியாது என்ற நிலை ஏற்படும் போது அது குறித்த ஒரு சான்றுறுதி சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு வழங்கப்படும். இதன் பின்னர் தகராறு ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கு தங்களது தகராற்றினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்காக நீதி மன்றத்திற்கு முன்வைக்கலாம்

The only cost involved, is a five-rupee stamp on a letter sent by a disputant to the Chairperson of the local Community Mediation Board to register a dispute.

ஒரு பிணக்கினை மத்தியஸ்தம் செய்வதற்காக மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டு 60 தினங்களில் அது தீர்க்கப்பட வேண்டும். ஒரு சிறிய குற்றமாயின் 30 நாட்களுக்குள் தீர்க்கப்படவேண்டிய தேவைப்பாடு சமூக மத்தியஸ்த சபைக்கு உண்டு. பொதுவாக தகாராறுகளை ஏற்படுத்திக் கொண்டவர்கள் தங்களை ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்வதற்கும் அவர்களது தகராறுகளுக்கு உரிய தீர்வினைப் பெறுதல் தொடர்பில் உடன்படுவதற்கும் இரண்டு அல்லது மூன்று மத்தியஸ்த கூட்டங்களேனும் அவசிப்படுவதுண்டு.

ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அடிப்படையில் நாடு முழுவதும் 329 மத்தியஸ்த சபைகள் காணப்படுகின்றன.

குறிப்பிட்ட ஒரு பிரதேசத்திற்காக கடமையாற்றுவதற்கு ஒவ்வொரு மத்தியஸ்த சபைகளுக்கும் 40 பேர்கள் வரையிலான ஒரு சபை நியமிக்கப்படும். அத்துடன் குறித்த பிதேசத்திற்காக நியமிக்கப்படுகின்ற மத்தியஸ்த சபைகளின் செயற்பாடுகள் அந்தந்தப் பிரதேசத்தில் ஏற்படுகின்ற தகராறுகளுக்கு மாத்திரம் வரையறுக்கப்படுவதுடன் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே குறித்த மத்தியஸ்த சபைகளில் அங்கம் வகிக்கவும் முடியும்.

பொதுவாக பிரதேச செயலாளர் மூலமாக அல்லது குறித்த மத்தியஸ்த சபையின் தலைவர் ஊடாகவே மத்தியஸ்தர்களாக நியமனம் வழங்குவதற்காக நபர்கள் பரிந்துரைக்கப்படுகின்றனர். அத்துடன் ,அரச சாராத சமூக சேவை நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், மதத் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள் அல்லது அரச சேவை உத்தியோகத்தர்கள் போன்றவர்களுக்கு மத்தியஸ்தர்களாக நபர்களைப் பரிந்துரைப்பதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்படுகின்றன. அவ்வாறு அவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றவர்கள் குறித்த பிரதேசத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும் அல்லது குறித்த பிரதேசத்தில் பணியாற்றுவராக இருக்க வேண்டும், என்பதுடன் அவர் சமூகத்தில் அங்கீகாரம் பெற்ற ஒருவராகவும் இருக்கவேண்டும் என்பதாக மத்தியஸ்த சபைகள் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மத்தியஸ்த செயற்பாட்டுக்கான அனைத்து திறன்களும் அவரிடம் இருக்க வேண்டும் என்பதாகவும் எதிர்பார்க்கப்படுவதுடன் இதற்காக விசேடமாக கல்வித் தகைமைகள் எதுவும் எதிர்பார்க்கப்படுவதில்லை. இவ்வாறு ஆரம்ப கட்டத் தகைமையினைப் பெற்றுக் கொள்கின்றவர்கள் நேர்முகப் பரீட்சை ஒன்றிற்கு உட்படுத்தப்பட்டு தெரிவு செய்யப்படுவதுடன் மத்தியஸ்த செயற்பாட்டுக்கு அவசியமான திறன்கள் விருத்தி செய்வதற்கான 40 மணித்தியாலயங்கள் கெண்ட பயிற்சிநெறி ஒன்றிற்கும் அவர்கள் உட்படுத்தப்படுவார்கள். குறித்த பயிற்சி நெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்கின்றவர்களுக்கு மத்தியஸ்த சேவைகள் ஆணைக் குழுவினால் உரிய நியமனக் கடிதங்கள் வழங்கப்படும். அதுடன் இவ்வாறு நியமிக்கப்படுகின்றவர்களுக்காக எதிர்வரும் மூன்று வருட காலங்களுக்காக, அவசியமான பயிற்சிகளும் உரிய ஆலோசனைகளும் வழங்குகின்ற பணி நீதி அமைச்சினால் மேற்கொள்ளப்படும்.

மத்தியஸ்த சபைகள் ஆணைக் குழுவானது 1988 ஆம் ஆண்டு 72 ஆம் இலக்க மத்தியஸ்த சபைகள் சட்டமூலத்தின் 2 வது பிரிவின் பிரகாரம் நிறுவப்பட்டுள்ளது. நாட்டின் ஜனாபதியினால் நியமிக்கப்படுகின்ற தலைவர் உட்பட 5 பேர்கள் இந்த ஆணைக்குழுவில் அங்கம் வகிப்பார்கள். இலங்கையில் காணப்படுகின்ற அனைத்து மத்தியஸ்த சபைகளுக்காகவும் மத்தியஸ்தர்களை நியமனம் செய்தல், கண்காணித்தல். நிர்வகித்தல் என்பன மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் பணிகளாகும்.